Friday 23 November 2012

உண்மையின் துயரம்...


நினைவுகள் பசுமையானவை விரும்பும்போது மீட்டுக்க நமக்காய் என்றும் காத்துகிடப்பவை.சில நினைவுகள் வலியை மட்டுமே மனது முழுவதும் நிரப்பினாலும் நாம் அதை மனதோடு நெருக்கமாகவே வைத்து கொள்கிறோம்.மறக்க நினைத்தாலும் அந்நினைவுகள் அடி மனதில் துடித்து கொண்டே தான் இருக்கும். உண்மையில் எந்த வலியும் மரத்து போவதோ உறங்கிபோவதோ இல்லை. நாம் தான் மறைத்து வைத்திருக்கிறோம். என்றைகாவது அது அடி மனதில் இருந்து எழுந்து மேலோங்கி நிற்கும்.நினைவுகளை மீட்டு எடுக்கும் கருவி  எதுவாக வேண்டுமெனிலும் இருக்கக்கூடும். அப்பாவின் கையைபிடித்து பள்ளிக்கு போகும் குழந்தையோ, மூட்டை தூக்கும் கிழவனோ, மீதி இருக்கும் உயிரை மட்டும் இறுக்கி பிடித்து சாலை ஓரத்தில்  உறங்கிகொண்டிருக்கும் மனிதனோ, வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறி பார்வையிலிருந்து கடைசி துளியாய் கரையும் வரை மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்து செல்லும் குடும்பமோ இல்லை.நீண்ட நாள் கழித்து கையில் அகப்பட்ட அந்த புத்தகம். பழைய புத்தகங்களை, பழைய  பரிசுகளை  மீண்டும் மீண்டும் அரவனைதுக்கொள்வது   ஒரு அழகியல் என்றாலும் கூட என்றைக்கும் அது மகிழ்ச்சியை மட்டும் தருவது இல்லை. நம்மால்  மட்டுமே உணர கூடிய புன்னகையுடன்  ஒரு சில கண்ணீர் துளிகளையும் பரிசாக தருகிறது. மூன்றுவருடங்களுக்கு முன்பு படித்த புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. பெண்களின் நிலை முன்பு போல் இல்லை, அவர்களுக்கு இப்போது சுதந்திரம்உள்ளது, பாதுகாப்பு உள்ளது, ஆண்களுக்கு நிகரான உரிமைகள் உண்டு என்று நான் கற்பனை செய்து வைத்து இருந்த எல்லா நம்பிக்கையும் சிதைத்தபுத்தகம் தான் அது. Simone De Beauvoir யின் 'even in Russia Women  are still Women ' என்ற வரியின்  கொடூரமான உண்மையை ஒவ்வொரு வார்த்தையிலும் உணரவைத்த புத்தகம். உண்மையை உணர்ந்து அதனுடன் நம் இயலாமையையும்  உணர்வதின் வலி, ரத்தம் கசிந்து கண்ணீராக வரும் துளிகளைக் கொண்டே விவரிக்க முடியும்.
                       பாகிஸ்தானி பெண் Tehhmina Durrani எழுதி அவருடைய சுய சரிதையான பிளாஸ்பமே()  அந்த புத்தகம். இது அந்த புத்தகத்தின் விமர்சனமல்ல அப்புத்தகத்தை விமர்சனம் செய்வது என்பது முடியாத ஒன்று. மதமும் ஆணாதிக்கமும் மட்டுமே உள்ள ஒரு சமுதாயத்தில் வாழும், இல்லை செத்து கொண்டு இருக்கும் பெண்ணின் உண்மை கதை. பெண்ணாக அவர் சந்தித்த முதல் தோல்வி தன் காதலை நிறைவேற்றி கொள்ள முடியாதது தான். கட்டுபாடு, குடும்ப மரியாதை, கலாச்சாரம் இப்படி அனைத்தும் உலகெங்கும் பெண்களை சார்ந்துதான் உள்ளது. அல்லாவின் நெருங்கிய மனிதன் ! என்று நம்பப்படும் ஒருவனுக்கு மனைவி ஆகிறாள். அவனின் பார்வை, ஆசை  அனைத்தும் தெஹ்மினாவின் உடலை சார்ந்தே இருக்கிறது. முதல் இரவில் அவள் உடலை தனக்கு அடிமையாக்கி கொள்கிறான்.அடுத்து வரும் நாட்களில் அவளின் அறிவையும், ஆத்மாவையும் அடிமையாக்குகிறான். இத்துணை நாட்களாக முக்கியத்துவம் தந்த உடலை தெரியாத ஒருவனிடம் ஒப்படைப்பது சுலபம் இல்லை. அதிலும் காமம் மட்டுமே நிரம்பி நிற்க்கும் விலங்கிடம் உடலை தருவது அடிமைத்தனத்தின் உச்சகட்டம். எந்த ரத்த கரையை காரணம் காட்டி பெண்கள் கோவில்களில் நுழைய கூடாது என்று  ஆண்கள் தடை விதிகிறார்களோஅதே ரத்த கரையில் தான் படுத்து உறங்கி கொண்டு இருகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். அவள் கன்னி தன்மை உடையவள் தானா என்பதை தீர்மானம் செய்ய அடுத்த நாள் மாமியார் தன் படுக்கையை பார்க்க வருகிறாள். உடைந்த கனவுகள், அடிமைத்தனம்,உடலுக்குள் இருக்கும் உயிரை மறந்து அதனை வேட்டையாடும் வலியின் அடையாளமாய் படிந்து கிடக்கும் ரத்தம்  தான் அவள் திருமணத்துக்கு முன்பு வரை  கன்னித்தன்மையுடன் இருந்தாள் என்பதன் அடையாளமும் கூட. இஸ்லாம் மதத்தின் கட்டமைப்புக்கு எதிரான எல்லாவற்றுக்கும் போராடுகிறாள். ஒவ்வொரு முறையும் உடல் அடிமை ஆகுவதும் ஆத்மா எதிர்த்து போராடுவதுமாக நாட்கள் நகர்கின்றது. அவளின் கணவர் பீர்செயின் இஸ்லாம் மதத்தின் முக்கிய ஆளாக கருதபடுபவன். மதத்தை ஆயுதமாக கொண்டு பெண்களை அடிமையாகும் ஆண்களுக்கு சிறந்த சான்று அவனின் பாத்திரம்.அவள் வீட்டில்  வேலை செய்யும் சிறிய  பெண்ணை அவன் காமத்தில் இருந்து தப்பவைக்க முயன்று முடியாமல் போக அவள் உடைந்து போகும்நிமிடங்கள், அவளின் குழந்தைகளை கூட அவளுக்கு எதிராக திரும்பிய நிமிடங்களை விட மிகவும் துயரமானது அவள் அவன் காதலனை சந்தித்தசூழ்நிலை. அவனுக்கு மட்டும் அடிமையாகி கொண்டதை அவனுக்கு திருப்தி அளிக்க வில்லை போல். அவளை வலுகட்டாயமாக விபசாரத்யில்ஈடுபடுத்து கிறான். காதலும் பெண்மையும் நிரம்பிய உடம்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை பட்டாளோ அவன் அவள் அறையில்நுழைகிறான். உடல் மறுத்து போய் வெறும் பொருளாக மட்டும் இருக்கும் போது வருகிறான். அவனின் சாவு வரைக்கும் அவளின் அடிமை தனம்,வலி, துயரங்கள், அவமானம் தொடகிர்கிறது. அவனின் சாவுக்கு பிறகு வாழ்வதற்கான காரணங்களும் ஆசைகளும் மறுத்து போகிறது.
                              மீண்டும் ஒரு முறை அந்த வரிகள் நினைவுக்கு வருகிறது 'even in Russia Women are still Women ' இந்த அடிமைத்தனமும் மத கட்டுப்பாடும் இஸ்லாம் பெண்களுக்கு மட்டும் நிகழ்பவை அல்ல,எனக்கும், உங்கள் அம்மாவுக்கும் மனைவிக்கும், மகளுக்கும் உங்களால் விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகளும் இப்படியாகவே இருக்கிறது. தீட்டு, வீட்டுக்கு தூரம்,மாத விலக்கு.. பெண் உடலில் இயற்கையாக நிகழும் உதிரபோக்குக்கு எத்தனை பெயர். இதை இன்னும் தீட்டு என்றும் நம்பவைக்கும் மதம் தான் பெண் அடிமை தனத்துக்கு முக்கிய காரணம். இதையெல்லாம் உடைத்தெரிய முயல்பவர்கள் இன்னொரு கடவளின் அவதாரம்! மதம் அதன் பங்குக்கு கடவுள், சாதி எனும் பெயரில் அப்பாவி மக்களையும், சில முட்டளையும்  இன்னும் முட்டாளாகிகொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணுக்கான சுதந்திரத்தை முடிவு செய்வது பெரும்பாலும் ஆண்களாகத்தான் இருகிறார்கள். நான் எந்த உடை அணியவேண்டும் என்பதை என் கல்லூரியும், அரசும் முடிவு செய்து நோட்டீஸ் ஒட்டும் நாட்டில், பெண்களின் திருமண வயது 19  என்று எல்லா  இடத்திலும் கிறுக்கி வைக்கும் நாட்டிலிருந்துக்கொண்டு நான் தனி பட்ட மனிதர்களை பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது என்று தெரியும். விருப்பம்இல்லாமல் புணர்வது, பெண்களை வெறும் போதை பொருளாக மட்டும் சித்தரிப்பது கூட வன்புனர்வுதான். வன்புனர்வுஎன்ற வார்த்தையை பயன்படுத்துவதிலும் மாற்று கருத்துகள் உண்டு. அவளை மீறி நடக்கும் ஒரு விடையத்துக்கு ஏன் அவள் பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். இன்னும் எத்தனைநாட்கள் தான் மலடி , வேசி, வாழா வெட்டி என்ற முத்திரைகளை பெண்களின் மீது சூட்ட ஆசைபடுகின்டிர்கள். பெண்மை என்ற அழகான ஒன்றை கற்பு என்ற பொய்யான ஒன்றுடன் ஒப்பிட்டு அதற்கு புனிதம் பூசி மனதில் வைக்காமல் ஏன்  கால்களின் நடுவில்வைத்து உள்ளார்கள் என்று புரியவில்லை.
                                            பெண் இன்னும் துன்ப படுகிறாள் என்று சொன்னால்  சில அறிவு ஜீவிகள் ஆண்களும் தான் துன்பப்படுகிறார்கள் என்று பதில்அளிக்கின்றனர். மனிதனாக பிறப்பு எடுத்த, உணர்வுகள் கொண்ட எல்லா  உயிரினத்துக்கும் வலி இருக்கிறது ஆனால்  பெண் அனுபவிக்கும் வலி இயற்கை தந்தது மட்டும் அல்ல ஆண் ஆதிக்கம் , மத கொள்கைகள் நிரம்பிய சமூதாயம் தந்தது. உதிரபோக்கு இயற்கை தந்தது. தாழ்வு மனப்பான்மை,பதற்றம், கவலை , அசதி, கோபம், எரிச்சல், தனிமை  இவை மதமும் ஆணாதிக்கமும் தந்தது. இவற்றை உடைத்து ஒரு பெண் வந்தால் அவளுக்கு நியாயம் கிடைப்பது இல்லை. அவள் மீதான விமர்சனங்கள் மட்டுமே வருகிறது. போராடும் குணம் உடைய பெண்ணுடன் குடும்பம் நடத்துவது கஷ்டம் என்று சமூதாயம் நம்புகிறது, அவளுக்கும் மனம் உள்ளது அதில் மென்மையான உணர்வுகள் இருக்கிறதுஎன்பதை ஏற்க மறுக்கிறது. பெண்கள் புகை பிடிப்பதாலும், மது அருந்துவதாலும்  கலாச்சாரம் சீர் அழிந்து விட்டது என்று கூச்சலிடும் ஆண்களுக்கு,பெண்களை மோசமாக சித்தரித்து பாடல்கள் எழுதுவதும், விளம்பரபடுத்துவது எல்லாம் ஏனோ கண்ணனுக்கு தெரிய வில்லை? உங்கள் perfume ,குளிர் பானம், சோப்பு எல்லாம் விற்கவேண்டும் என்பதற்காக பெண்களை அறை நிர்வாணமாகவும், ஆண்களிடம் மயங்கும் அற்ப பொருளாக சித்தரிக்கும்போது மட்டும் உங்கள் கலாச்சாரம் சீர் அழிய வில்லையா? தினம் தினம் வாழ்வதே போராட்டமாக இருக்கும் பட்சதில் சமூக பிரச்சனைக்காக, சமூகநலனுக்காக போராடும் ஒரு பெண் எத்தனை விமர்சனங்களை, அவமானகளை சந்திக்க நேரிடுகிறது. உணர்வுகளை மதிக்காமல் உருப்புகளைமட்டும் பெண்ணாக கருதும் சமுதாயத்தில் ஒரு பெண் போராளியாக மாறுவது அவள் தனிபட்ட துயரத்துக்கு மறுத்து போய் மக்களின் வலிகளுக்கு,துயரங்களுக்கு உயிரை கொடுக்க முன்வரும்போதே சாத்தியமாகும். கட்டமைப்புகளை உடைக்க போராடும் ஒவ்வொரு பெண்ணும் போராளிகள்தான். ஆதலினால் 'ஆண்களே' உங்கள் விமர்சனங்களை, எதிர்பார்புகளை குப்பையில் போடுங்கள். அவளுக்கும் சுயம் உள்ளது!  Men are made to regret for their weakness and woman for their strength!

No comments:

Post a Comment